47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தமிழகத்திற்கு இரு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகள்

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்காக இரு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :18 பிப்ரவரி 2021, 5:32 am

DIN


தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்காக இரு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வேளாண்துறை இணைச் செயலாளராக இருந்த ஆனந்த் ஐஏஎஸ் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதாரத்துறை இணைச் செயலாளராக இருந்த அஜய் யாதவ் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளை கவனமாக கண்காணிப்பதற்காக இரு  இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் தமிழகம் வந்திருந்த தேர்தல் ஆணையக் குழு, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.

சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பிரசாரப் பணிகளில் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.