ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாநில பெண் குழந்தைகள் நாள் விழா: வாழப்பாடியில் உறுதிமொழியேற்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா மற்றும் பெண் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

News image
வாழப்பாடியில் நடைபெற்ற பெண் குழந்தைகள் தின விழா கருத்தரங்கு
Updated On :24 பிப்ரவரி 2021, 2:11 pm

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா மற்றும் பெண் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளான, பிப்ரவரி 24-ம் தேதி, மாநில பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், மாநில பெண் குழந்தைகள் தின விழா மற்றும் பெண் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் உறுதிமொழி ஏற்ற அங்கன்வாடி பணியாளர்கள்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் உறுதிமொழி ஏற்ற அங்கன்வாடி பணியாளர்கள்.

வாழப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, வட்டார குழந்தைகள் நல அலுவலர் வை.அருள்மொழி தலைமை வகித்தார்.

மேற்பார்வையாளர் பத்மா வரவேற்றார். பேளூர் அரசு மருத்துவர் கார்த்திகா, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் பெ.பெரியார்மன்னன், வட்டார ஒருங்கிணைப்பாளர் செ.கீர்த்திகா தேவி, வட்டார சுகாதார செவிலியர் ராணி  ஆகியோர், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் கல்வி, குழந்தை திருமணம், பெண் சிசுக்கொலை, கருக்கலைப்பு தடுப்பு, தாய்ப்பால் புகட்டலின் முக்கியத்துவம், பெண் குழந்தைகளுக்கான அரசு  நலத்திட்ட உதவிகள் குறித்து கருத்துரை வழங்கினர்.

திட்ட உதவியாளர் மு.தினேஷ், மேற்பார்வையாளர்கள் ரா. ஜானகி, மு.பத்மாவதி மற்றும் வாழப்பாடி வட்டார அங்கன்வாடி மைய பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிறைவாக, விழாவில் பங்கேற்ற அனைவரும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.