புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சனிக்கிழமை முதல் விருப்ப மனு வாங்கப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
வரவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சனிக்கிழமை (பிப். 27) முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை விருப்ப மனு வாங்கப்படும்.
முன்னதாக, விருப்ப மனுவை ரூ. 100 செலுத்தி புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை, உரிய ஆவணங்களை இணைத்து, பொதுப்பிரிவினர் ரூ. 5,000, ஆதிதிராவிடர் மற்றும் பெண்கள் ரூ. 2,500 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
மனுக்களை பெறவும், பரிசீலித்து தலைமைக்கு அனுப்பவும் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில் தனுஷ், இளையராஜா, ரகுமான், மணிமாறன் ஆகிய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கதாபாத்திர தேர்வில் அசத்தும் ரேச்சல் ரெபெக்கா!

Akira And FIFA! Anime மற்றும் Games குறித்த
ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!
பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

