தொகுதிப் பங்கீடு: மதிமுக பேச்சுவார்த்தைக் குழு அமைப்பு

சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பற்றி திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ (கோப்புப்படம்)
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ (கோப்புப்படம்)

சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பற்றி திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி கூட்டணிக் கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. 

அந்தவகையில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திமுகவில் டி.ஆர். பாலு தலைமையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து அதன் கூட்டணிக் கட்சியான மதிமுகவும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பேச்சுவார்த்தை குழுவை அமைத்துள்ளது. 

மல்லை சத்யா, செந்திலதிபன், கு.சின்னப்பா, அந்திரிதாஸ் ஆகிய நான்கு பேர் கொண்ட குழுவை பொதுச் செயலாளர் வைகோ நியமித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com