விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனையைத் தொடங்கினார் மு.க.அழகிரி

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையைத் தொடங்கியுள்ளார்.

News image
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி (கோப்புப்படம்)
Updated On :3 ஜனவரி 2021, 12:24 pm

DIN

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையைத் தொடங்கியுள்ளார்.

பாண்டிகோவில் உள்ள துவாரகா பேலசில் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவுள்ளார்.

தேர்தல் நெருங்கும் சூழலில் புதிய கட்சி தொடக்கம், பிற கட்சிகளுக்கு ஆதரவு உள்ளிட்டவை பற்றியும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் மேடையில் ஆதரவாளர்கள் திரண்டதால், கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 

மேடையில் கூட்டம் சரிசெய்யப்பட்ட பிறகு ஆதரவாளர்கள் மத்தியில் மு.க.அழகிரி பேசி வருகிறார்.

மு.க.அழகிரி இல்லத்திற்கு ஆதரவாளர்கள் வரவேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.