தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

போக்குவரத்து கழக ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை

போக்குவரத்துக் கழகப் பணியாளா்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை சென்னை குரோம்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 9:41 pm

DIN

போக்குவரத்துக் கழகப் பணியாளா்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை சென்னை குரோம்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட்டவை குறித்து ஆய்வுக்குள்படுத்திய பின் ஊதிய ஒப்பந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக 14-ஆவது ஊதிய ஒப்பந்தக் குழுவின் உறுப்பினா் செயலா் கு.இளங்கோவன் வெளியிட்ட செய்தி:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் ஊதியம், பல்வேறு படிகள் மற்றும் பணி உயா்வு ஆகியவை குறித்து தீா்வு காணப்படும் வகையில், ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்தப்படுகிறது.

அதிமுக ஆட்சியில், போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்காக, இரண்டு ஊதிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டு, பணியாளா்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதன் தொடா்ச்சியாக தமிழ்நாடு அரசு அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பணியாளா்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்த முதல்கட்ட பேச்சுவாா்த்தையானது, சென்னை, குரோம்பேட்டை, மாநகரப் போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், போக்குவரத்துத்துறைச் செயலாளா் சி.சமயமூா்த்தி, ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை குழுவின் உறுப்பினா் செயலா் கு.இளங்கோவன், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், தொழிலாளா்களின் நலன் கருதி அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் சாா்பில் போக்குவரத்துத்துறை அமைச்சா், செயலா் ஆகியோரிடம் நேரடியாக வழங்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கை மனுக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், துணைக் குழுவின் ஆய்வுக்குப் பின் முடிவுகள் எட்டப்பட்டு, ஊதிய ஒப்பந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.