விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஜன. 20 வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள்: திமுக

ஜனவரி 20-ஆம் தேதி வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

News image
ஜன. 20 வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள்: திமுக (கோப்புப்படம்)
Updated On :7 ஜனவரி 2021, 9:05 am

DIN

ஜனவரி 20-ஆம் தேதி வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை தமிழகத்திலுள்ள கிராமங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழகத்திலுள்ள ஒரு சில மாவட்டங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் திமுக சார்பில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தொடர் மழை பெய்து வருவதால் ஒருசில பகுதிகளில் மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்கள் கிராம சபைக் கூட்டங்களுக்கான கால அவகாசத்தை நீட்டித்திட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் வைத்த கோரிக்கையின்படி ஜனவரி 20-ஆம் தேதி வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.