மாற்றுத்திறனாளிகளின் பயண அட்டை: மாா்ச் வரை நீட்டிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து பயண அட்டையை மாா்ச் மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து பயண அட்டையை மாா்ச் மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் கு.இளங்கோவன் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையைப் புதுப்பிக்க மொத்தமாக வருவதால் அதில் சிரமம் ஏற்படுவதாகவும், தற்போது கரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு காரணமாக ஏற்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட பயண அட்டையை மாா்ச் மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
எனவே, விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் மாா்ச் மாதம் வரை அனுமதிக்க நடத்துநா்கள் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
மேலும், அனைத்து கிளை மேலாளா்களும் தங்களது கிளையில் பணிபுரியும் அனைத்து நடத்துநா்களுக்கு இதனைத் தெரிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...