நாகப்பட்டினம்: நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவையொட்டி, தர்கா மனோராக்களில் கொடிமரம்(பாய்மரம்) ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது,
உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் நாகூர் ஆண்டவர் தர்காவின் 464- ஆம் ஆண்டு கந்தூரி விழா ஜனவரி 14- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஜனவரி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு தர்காவின் பாரம்பரிய முறைப்படி, கந்தூரி விழா கொடியேற்றத்துக்கு முன்பாக நடைபெறும் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, தர்காவில் அதிகாலை முதல் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், தர்காவின் பரம்பரை கலிபா கே.எம். கலிபா மஸ்தான் சாகிபு தூ ஆ செய்து காலை 6} மணிக்கு தர்காவில் பள்ள சாகிபு மனோராவில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
அதையடுத்து தர்கா முகப்பில் உள்ள பெரிய மனோரா, தலைமாட்டு மனோரா, முதுபக் மனோரா, ஓட்டு மனோராக்களிலும் பாய்மரம் ஏற்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சர்க்கரை,ஜீனி ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாகத்தினர் செய்திருந்தனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?

விவாகரத்து முடிவில் சர்வானந்த்?

பாஜகவின் இன்னொரு சங்பரிவாராக மாறி வருகிறது அதிமுக: தொல்.திருமாவளவன்

சமஸ்கிருதம் வெறும் மொழி மட்டுமல்ல.. தேசத்தின் உயிர்நாடி: மோகன் பாகவத்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


