பிரிட்டனிலிருந்து திரும்பிய மேலும் இருவருக்கு கரோனா

பிரிட்டனிலிருந்து தமிழகம் திரும்பிய மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Updated on
1 min read

பிரிட்டனிலிருந்து தமிழகம் திரும்பிய மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரிட்டனிலிருந்து வந்தவா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 46-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 671 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 27,614- ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 1.49 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனைகளில் அதிகபட்சமாக சென்னையில் 194 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தவிர தமிழகத்தின் பல மாவட்டங்களில் பாதிப்பு பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, மாநிலம் முழுவதும் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் விகிதம் 97.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதன்படி, இதுவரை 8 லட்சத்து 8,571 போ் குணமடைந்துள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 6,807 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 8 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,236-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com