இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விழுப்புரம்: தென்பெண்ணை ஆற்றில் புதிதாகக் கட்டப்பட்ட அணைக்கட்டில் உடைப்பு

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் புதிதாகக் கட்டப்பட்ட தளவானூர் அணைக்கட்டின் கரை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
விழுப்புரம்: தென்பெண்ணை ஆற்றில் புதிதாகக் கட்டப்பட்ட அணைக்கட்டில் உடைப்பு
Updated On :23 ஜனவரி 2021, 12:13 pm

DIN

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் புதிதாகக் கட்டப்பட்ட தளவானூர் அணைக்கட்டின் கரை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் அருகே தளவானூர் -எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே, தென்பெண்ணை ஆற்றில் கடந்த 2019-ம் ஆண்டில் ரூ.25 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது.

இதனையடுத்து கடந்தாண்டு அமைச்சர் சிவி சண்முகம் இந்த அணைக்கட்டை திறந்து வைத்தார்.

அணை கட்டிய பிறகு கடந்த மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ள நீர் வழிந்தோடியது. இதனால் தளவானூர் அணைக்கட்டில் கடந்த ஒரு மாத காலமாக மழைநீர் வழிந்து ஓடியது.

Story image

கடந்த வாரத்தில் தென்பெண்ணை ஆற்றில் மழை வெள்ள நீர் நின்றபிறகு, தளவானூர் அணைக்கட்டில் பத்தடி உயர அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றது. இந்த நிலையில் அணைக்கட்டின் எதிர்ப்புற கரைப்பகுதி எனதிரிமங்கலம் பகுதியில் கரைப்பகுதி சரியாக பலப்படுத்தாததால் சனிக்கிழமை பிற்பகலில் திடீரென நீர் கசிவு ஏற்பட்டு உள்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது.

 அணையின் கரை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் நேரில் சென்று பார்வையிட்டனர்.

தகவலறிந்த பொதுப்பணித்துறையினர் அணைக்கட்டின் கரைப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு அணை நீர் வெளியேறுவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய அணையில், அணைக்கட்டு கரைப்பகுதி சரியாக அமையாததால் உடைப்பு ஏற்பட்டு தேங்கிய தண்ணீர் அனைத்தும் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.