11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

குடியரசு நாள்: 96 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - மதுரை ஆட்சியர் வழங்கினார்

மதுரையில் நடைபெற்ற குடியரசு  நாள் விழாவில் 96 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 20 ஆயிரத்து 695 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வழங்கினார்.

News image

குடியரசு நாள்: 96 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - ஆட்சியர் வழங்கினார்

Updated On :26 ஜனவரி 2021, 3:46 am

மதுரை: மதுரையில் நடைபெற்ற குடியரசு  நாள் விழாவில் 96 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 20 ஆயிரத்து 695 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வழங்கினார்.

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு  நாள் விழாவில் ஆட்சியர் த.அன்பழகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 149 போலீஸாருக்கு பதக்கங்களை ஆட்சியர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் வழங்கினர்.

பின்னர் பல்வேறு துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் 263 பேருக்கு விருதுகளை ஆட்சியர் வழங்கினார். அதன் பின்னர் வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை, மாற்றுத் திறனாளிகள் நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 96 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 20 ஆயிரத்து 695 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

தென்மண்டல ஐஜி எஸ்.முருகன், மதுரை மாநகரக் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, டிஐஜி ராஜேந்திரன், கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜி.செந்தில்குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.