சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

சுகாதாரத்துறையின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: அரசாணை

உயர்கல்வித்துறையின் கீழ் இருந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

News image

சுகாதாரத்துறையின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: அரசாணை

Updated On :28 ஜனவரி 2021, 10:24 am

DIN

உயர்கல்வித்துறையின் கீழ் இருந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு கீழ் செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரி இதன் மூலம் கடலூர் மருத்துவக் கல்லூரியாகிறது.

அதிக கட்டணம் வசூல் செய்வதாக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது ராஜா முத்தையா கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்த நிலையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியும் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் என்றும் தமிழக அரசு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.