ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கும்மிடிப்பூண்டியில் 20,033 குழந்தைகளுக்கு 130 மையங்களில் போலியோ சொட்டு மருந்து

கும்மிடிப்பூண்டியில் 20 ஆயிரத்து 33 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று தரப்படடுகிறது. 0 முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வு கும்மிடிப்பூண்டி வட்டார ச

News image
கும்மிடிப்பூண்டியில் 20,033 குழந்தைகளுக்கு 130 மையங்களில் போலியோ சொட்டு மருந்து
Updated On :31 ஜனவரி 2021, 3:39 am

DIN

கும்மிடிப்பூண்டியில் 20 ஆயிரத்து 33 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று தரப்படடுகிறது. 0 முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வு கும்மிடிப்பூண்டி வட்டார சுகாதாரத்துறை சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்று வருகிறது.

கும்மிடிபூண்டி வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் மேற்பார்வையில்  கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம், ஆரம்பாக்கம் பேருந்து நிலையம் ,கவரப்பேட்டை பேருந்து நிலையம், மாதர்பாக்கம் பேருந்து நிலையம், சுண்ணாம்புகுளம் பேருந்து நிலையம் ,மற்றும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம், எளாவூர் ரயில் நிலையம் , ஆரம்பாக்கம் ரயில் நிலையம் உள்ளிட்ட 130 மையங்களில் 20,033 குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது.

கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வை கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் துவக்கி வைத்தார். நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் கோபி முன்னிலை வகித்தனர்.

அதே போல கண்ணன்கோட்டையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊராட்சி தலைவர் கோவிந்தசாமி போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார்.

இந்த 130 போலியோ சொட்டு மருந்து முகாம்களில் கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில் 12 மருத்துவர்கள் கண்காணிப்பில் 162 சுகாதார ஊழியர்கள், 189அங்கன்வாடி பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.