ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: இந்திய மாணவர் சங்கத்தினர் நூதனப் போராட்டம் (விடியோ)

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி சைக்கிள் டயரை உருட்டிக்கொண்டும், நுங்கு வண்டி உருட்டிக் கொண்டும் கோவையில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :1 ஜூலை 2021, 11:15 am

DIN

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி சைக்கிள் டயரை உருட்டிக்கொண்டும், நுங்கு வண்டி உருட்டிக் கொண்டும் கோவையில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை நூறு ரூபாயைக் கடந்துள்ளது. விலை உயர்விற்கு காரணமான ஒன்றிய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Story image

மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அசார், செயலாளர் தினேஷ்ராஜா தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி சைக்கிள் டயரை உருட்டிக்கொண்டும், நுங்கு வண்டி உருட்டிக் கொண்டும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கலால் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் பெரு முதலாளிகளுக்கு வரி சலுகைகள் அளித்துவிட்டு சாதாரண மக்கள் மீது பெட்ரோல், டீசல் விலை உயர்வை திணிப்பதாகவும் குற்றம்சாட்டி முழக்கங்களை எழுப்பினர்.

மத்திய அரசு விலைக் குறைப்பில் ஈடுபடும் வரை தொடர்ந்து போராடுவோம் என மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.