எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

கும்பகோணம் அருகே செங்கல் சூளை தொழிலாளி வெட்டிக் கொலை

கும்பகோணம் அருகே செங்கல் சூளை தொழிலாளி வெள்ளிக்கிழமை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

News image
ராஜேந்திரன்
Updated On :2 ஜூலை 2021, 7:57 am

DIN


கும்பகோணம்: கும்பகோணம் அருகே செங்கல் சூளை தொழிலாளி வெள்ளிக்கிழமை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). செங்கல் சூளை தொழிலாளி. இவரை அப்பகுதியில் மர்ம நபர்கள் சிலர் வெள்ளிக்கிழமை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து திருநீலக்குடி காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர், 

முதல் கட்ட விசாரணையில், ராஜேந்திரன், சில நாள்களுக்கு முன்பு அதே பகுதியிலுள்ள நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலத்தைத் தனது தாத்தாவிடமிருந்து ஏமாற்றி வாங்கி விட்டதாகக் கூறி பேரனுக்கும், ராஜேந்திரனுக்கும் பிரச்னை ஏற்பட்டது.

இதையடுத்து, ஊர் பஞ்சாயத்து கூடி பிரச்னைக்குரிய இடத்தைப் பிரித்து தர வேண்டும் எனக் கூறினர். இதற்கு ஒப்புக் கொண்டு வந்த ராஜேந்திரன், தன்னைக் குடி போதையில் ஏமாற்றி எழுதி வாங்கி விட்டனர் என, நிலத்தை விற்பனை செய்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த பிரச்னை தொடர்பாக ராஜேந்திரனை வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.