அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் கணக்கீட்டுக்கு ஸ்மார்ட் மீட்டர் முறை: செந்தில் பாலாஜி

மின் வாரியத்தில் ஏற்பட்டுள்ள ரூ.900 கோடி இழப்பை சரி செய்யும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் முறை அமல்படுத்தப்படும் என்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
Published on

மின் வாரியத்தில் ஏற்பட்டுள்ள ரூ.900 கோடி இழப்பை சரி செய்யும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் முறை அமல்படுத்தப்படும் என்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மின் வாரியத்தில் இழப்பை சரி செய்ய ஆய்வு செய்து சீர்திருத்தங்கள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின் கணக்கீடு செய்யும் முறை டிஜிட்டல் மீட்டரிலிருந்து ஸ்மார்ட் மீட்டர் முறைக்கு மாற்றப்படும். கடந்த ஆட்சியில் 9 மாதங்கள் செய்யப்படாமல் இருந்த பராமரிப்புப் பணிகள் கடந்த 10 நாள்களில் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com