ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நோயாளி இருந்தால் என்ன? செத்தால் என்ன? மருத்துவ அதிகாரியின் அலட்சியப் பேச்சு

நோயாளி உயிருடன் இருந்தால் என்ன? செத்தால் என்ன? என்று சிவகங்கை அரசு கல்லூரி மருத்துவமனை மருத்துவ அதிகாரி, அரசு மருத்துவமனை செவிலியரிடம்  பேசும் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image

நோயாளி இருந்தால் என்ன? செத்தால் என்ன? மருத்துவ அதிகாரியின் அலட்சியப் பேச்சு

Updated On :6 ஜூலை 2021, 6:11 am

DIN

நோயாளி உயிருடன் இருந்தால் என்ன? செத்தால் என்ன? என்று சிவகங்கை அரசு கல்லூரி மருத்துவமனை மருத்துவ அதிகாரி, அரசு மருத்துவமனை செவிலியரிடம்  பேசும் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் இருந்தால் என்ன? செத்தால் நமக்கென்ன? மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு மட்டுமே நோயாளிகளை அனுப்ப வேண்டும் என சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியரிடம் மருத்துவமனை உயர் அதிகாரி போனில் பேசும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

 இளையான்குடி ஒன்றியம் வடக்கு கீரனூர் கிராமத்தைச்  சேர்ந்தவர் துரைராஜ் மகன் கார்த்திக்( 24). இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின் நெஞ்சு வலி ஏற்பட்டதால் செவிலியர் நோயாளி கார்த்திக்கை மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து நோயாளியின் தரப்பைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து மருத்துவமனை நிலைய உயர் அதிகாரி டாக்டர் மீனாவிடம் புகார் செய்தனர். அதன் பின்னர் டாக்டர் மீனா செவிலியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அவர் பேசிய விபரம், கார்த்திக்கை ஏன் தனியார் மருத்துவமனைக்கு போகுமாறு பரிந்துரை செய்தீர்கள். நாம் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு மட்டுமே மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்ய வேண்டும்.

நோயாளி உயிருடன் இருந்தால் என்ன? செத்தால் நமக்கென்ன? நோயாளியின் நல்லது கெட்டது பற்றியெல்லாம்  நாம் யோசிக்கக் கூடாது. இவ்வாறு அந்த செல்லிடப்பேசி உரையாடல் உள்ளது.

இந்த உரையாடலின்போது மருத்துவ அதிகாரி, செவிலியரிடம் நோயாளி உயிருடன் இருந்தால் என்ன? செத்தால் நமக்கென்ன? என பேசும் பேச்சு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.