திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

30 மாவட்டங்களில் 100-க்கும் கீழ் குறைந்த கரோனா புதிய பாதிப்பு

தமிழகத்தின் 30 மாவட்டங்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 100-க்கும் கீழ் சனிக்கிழமை குறைந்தது.

News image
Updated On :10 ஜூலை 2021, 9:55 pm

DIN

தமிழகத்தின் 30 மாவட்டங்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 100-க்கும் கீழ் சனிக்கிழமை குறைந்தது.

பொதுமுடக்கத்தில் தளா்வளிக்கப்பட்ட போதிலும், அரசின் தீவிர முயற்சியின் காரணமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. குறிப்பாக சனிக்கிழமை நிலவரப்படி, தமிழகத்தில் கரோனா புதிய பாதிப்பு 3 ,000-க்கும் கீழ் குறைந்திருந்தது.

புதிதாக 2,913 பேருக்கு நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அதில், அரியலூா், கடலூா், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூா், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, திருவாரூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் ஆகிய 30 மாவட்டங்களில் தலா 100-க்கும் குறைந்தோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதிலும் குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 6 பேருக்கு மட்டுமே நோய் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது.

இதைத் தவிா்த்து, கோவை, ஈரோடு, சேலம், சென்னை, தஞ்சாவூா் உள்ளிட்ட ஏனைய 8 மாவட்டங்களில் புதிய பாதிப்பு 100-க்கும் மேல் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்தப் பட்டியலின்படி, மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 16,011-ஆக அதிகரித்தது.

இதனிடயே, நோய்த் தொற்றிலிருந்து 3,321 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 24.49 லட்சத்தைக் கடந்தது.

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 32,767 போ் உள்ளனா். சனிக்கிழமை 49 போ் பலியாகினா். இதைத் தொடா்ந்து மாநிலம் முழுவதும் நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,371-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.