தோப்புத்துறையில்  மாட்டு வண்டியில் ஆட்டோவை ஏற்றி நூதனப் போராட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த தோப்புத்துறையில மாட்டு வண்டியில் ஆட்டோவை ஏற்றிய மனிதநேய ஜனநாயக கட்சியினர்  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சனிக்கிழமை (ஜூலை.10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர
தோப்புத்துறையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாய கட்சியினர்.
தோப்புத்துறையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாய கட்சியினர்.


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த தோப்புத்துறையில மாட்டு வண்டியில் ஆட்டோவை ஏற்றிய மனிதநேய ஜனநாயக கட்சியினர்  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சனிக்கிழமை (ஜூலை.10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோப்புத்துறை ஆறுமுகச்சந்திப்பு கடை வீதியில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து நூதனப் போராட்டத்தில்  ஈடுபட்டனர். 

மாட்டு வண்டியில் ஆட்டோவை ஏற்றி வைத்தும், மற்றொரு ஆட்டோவின் மீது சமையல் எரிவாயு உருளையை ஏற்றி மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

போராட்டக்காரர்கள் பெட்ரோல் ,டீசல் விலை உயர்வைக் கண்டித்தும்,மோடிக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நூதனப் போராட்டத்துக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஷேக்அகமதுல்லா தலைமை வகித்தார்.

கட்சியின் நகரச் செயலாளர் முகமது செரிஃப், துணைச் செயலாளர் முருகாைந்தம், விவசாய அணி செயலாளர் கவிஞர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com