பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மத்திய அரசு வேடிக்கைப் பார்ப்பது நல்லதல்ல: துரைமுருகன்

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுத்தே தீர்வோம் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 ஜூலை 2021, 4:32 pm

DIN

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுத்தே தீர்வோம் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேக்கேதாட்டு அணை நிச்சயம் கட்டப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், துரைமுருகன் இதனைத் தெரிவித்துள்ளார். 

இத்தகைய மோதல் போக்கு இரு மாநிலங்களுக்கு இடையே நடப்பதை மத்திய அரசு வேடிக்கைப் பார்ப்பது நல்லதல்ல. இது இரு மாநிலங்களின் வளர்ச்சிக்கும் உகந்ததல்ல.

ஒரு மாநிலத்திற்குள் ஓடுகிற நீர் அந்த மாநிலத்திற்கே என்று சொந்தம் கொண்டாட முடியாது. நதி நீர் என்பது தேசிய சொத்து என்பதை கர்நாடக அமைச்சர் அறிந்திருப்பார் என கருதுகிறேன்.

தமிழகத்திற்கு வரும் நதி நீரை மறித்து அணை கட்டுவோம் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை புறக்கணிப்பது போன்றது என்று துரைமுருகன் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.