மோட்டார் வாகன ஆய்வாளர் இரண்டாம் நிலை பதவிக்கான நேர்முகத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
ஜூலை 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறவிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் இரண்டாம் நிலை பதவிக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் நேர்முகத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.