சென்னையில் கரோனா நிலவரம்: நோயாளிகள் எண்ணிக்கை உயர்கிறதா?
சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,680 ஆக உயர்ந்துள்ளது.


சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,680 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் கடந்த மே மாதம் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து, தற்போது மெல்ல மீண்டு வரும் நிலையில், மூன்றாம் அலைக்கான எச்சரிக்கைக் குரல்கள் ஆங்காங்கே எழுந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் அந்த குறைவு பெரியளவில் இல்லாமல் ஒரே நிலையில் தொடர்ந்தது.
அந்த நிலை மாறி, இந்த வாரத்தில் கடந்த மூன்று நாள்களாக கரோனா நோயாளிகள் எண்ணிக்கைக் குறையாமல் மெல்ல ஒற்றை இலக்க எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது.
அதாவது, இன்று கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,680 ஆக உள்ளது. இது நேற்று 1,661 ஆக இருந்துள்ளது. கடந்த ஞாயிறன்று 1659 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். எனவே, குறையும் போக்கு நின்று, மெல்ல அதிகரிக்கும் போக்குத் தொடங்கியுள்ளது.
எனவே, கரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தை மறக்காமல், அதன் மூலம் கற்றப் பாடத்தை நினைவில் கொண்டு, மக்கள் கரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.
கரோனா இரண்டாம் அலை ஓய்ந்திருக்கலாம். கரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு ஒரேயடியாக ஓயவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...