திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால் உத்தரவாதம் கிடையாது: உயர்நீதிமன்றம்

இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால் வாகனங்களுக்கான உத்தரவாதம் கிடையாது

News image
இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால் உத்தரவாதம் கிடையாது: உயர்நீதிமன்றம்
Updated On :15 ஜூலை 2021, 9:07 am

DIN

சென்னை: இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால் வாகனங்களுக்கான உத்தரவாதம் கிடையாது என நுகர்வோருக்கு அறிவுறுத்த வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை ஆணையருக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில்,  திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், சாலையில் செல்லும் போது பின்னால் வரும் வாகனங்களை கண்காணிக்க ஏதுவாக வாகனங்களில் கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன. ஆனால், இரு சக்கர வாகனங்களில் இந்த கண்ணாடிகள் அகற்றப்படுகிறது. இதனால் விபத்துக்கள் அதிகரிக்கிறது.

YouTube video thumbnail

தமிழ்நாடு மாநில மோட்டார் வாகன சட்டத்தின்படி, கண்ணாடி இல்லாமல் இரு சக்கர வாகனங்களை இயக்குவோருக்கு ரூ.500  அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் , தமிழக போக்குவரத்து துறை ஆணையர், இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகள் பொருத்த வேண்டும் என்ற விதியை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்.

மேலும், இருசக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியை அகற்றினால், வாகனத்துக்கான உத்தரவாதம் கிடையாது என நுகர்வோரை எச்சரிக்க வாகன விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும். 

தேவைப்பட்டால், இதுதொடர்பாக உத்தரவாத விதிகளை உருவாக்க வாகன உற்பத்தியாளர்களளுக்கு அறிவுறுத்தலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.