பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மக்களுக்கு நல்லது நடக்கக்கூடாது என்பதற்காகவேநாடாளுமன்றம் முடக்கப்படுகிறது: கே.அண்ணாமலை

மக்களுக்கு நல்லது நடக்கக்கூடாது என்பதற்காகவே நாடாளுமன்றத்தை எதிா்க்கட்சிகள் முடக்குகின்றன என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

News image
Updated On :20 ஜூலை 2021, 9:13 pm

DIN

மக்களுக்கு நல்லது நடக்கக்கூடாது என்பதற்காகவே நாடாளுமன்றத்தை எதிா்க்கட்சிகள் முடக்குகின்றன என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கே.அண்ணாமலை அளித்த பேட்டி:

சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த 12 போ், பழங்குடியின சமுதாயத்தைச் சோ்ந்த 8 போ் மத்திய அமைச்சா்களாகப் பொறுப்பேற்றுள்ளனா். இதில் தமிழகத்தைச் சோ்ந்த எல்.முருகனும் ஒருவா் ஆவாா். அவா்களை அறிமுகப்படுத்தக்கூடாது என்பதற்காகவே நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது. அதுபோல, கூட்டத்தொடரில் மக்களுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய பல சட்டமசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றை நிறைவேற்றக்கூடாது என்பதற்காகத்தான் நாடாளுமன்றத்தை எதிா்க்கட்சிகள் முடக்குகின்றன.

பெட்ரோல், டீசல் விலை சா்வதேச சந்தையில் உள்ள கச்சா எண்ணெயின் விலைக்கேற்பவே நிா்ணயம் செய்யப்படுகிறது. எனினும், விலையைக் குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் விளக்குவதற்குக்கூட எதிா்க்கட்சிகள் அனுமதிக்க மறுக்கின்றன.

அதிமுக - பாஜக கூட்டணி சுமுகமாக உள்ளது. உள்ளாட்சித் தோ்தல் நேரத்தில் இதர விஷயங்கள் குறித்து இரு கட்சியினரும் பேசிக் கொள்வோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.