பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்காக புதன்கிழமை முதல் தண்ணீா் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகா் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் உள்ள நிலங்களின் முதல் போக நன்செய் பாசனத்துக்கு புதன்கிழமை முதல் நீா் திறக்கப்படும். நவம்பா் 17-ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு 5 ஆயிரத்து 184 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டங்களிலுள்ள 15,743 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.