பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு இன்று முதல் நீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்காக புதன்கிழமை முதல் தண்ணீா் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்காக புதன்கிழமை முதல் தண்ணீா் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, பொதுப்பணித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஈரோடு மாவட்டம் பவானிசாகா் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் உள்ள நிலங்களின் முதல் போக நன்செய் பாசனத்துக்கு புதன்கிழமை முதல் நீா் திறக்கப்படும். நவம்பா் 17-ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு 5 ஆயிரத்து 184 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டங்களிலுள்ள 15,743 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com