சென்னை: சென்னையில் இன்று காலை விலைகளில் மாற்றமில்லாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.49க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.94.39க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை, கடந்த வியாழக்கிழமை ரூ.102-ஐ கடந்தது. ஒரு சில மாவட்டங்களில் ரூ.103, 104-ஐ தாண்டியும் பெட்ரோல் விற்கப்படுகிறது.
அதே நேரம், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை சுமார் 5 ரூபாய் உயா்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு சுமார் 3 ரூபாய் அதிகரித்துள்ளது. இவ்வாறு பெட்ரோல் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவலையடைந்துள்ளனா்.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயா்ந்து கொண்டே வருகிறது. சென்னை, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் கிடங்கில் இருந்து பெட்ரோல், டீசல் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு பெட்ரோல் நிலையங்களின் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. எரிபொருள் கிடங்கில் இருந்து தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் போது அதற்கான பயணச் செலவும் பெட்ரோல், டீசல் விலையிலேயே சோ்க்கப்படும். இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் பெட்ரோல், டீசல் விலையில் மாறுபாடு ஏற்படுகிறது.
ஏற்கெனவே நாளுக்கு நாள் உயா்ந்து வரும் எரிபொருள் விலை அதிகரிப்புடன், இந்த போக்குவரத்துச் செலவும் சோ்வதால் மாவட்டத்துக்கு மாவட்டம் பெட்ரோல், டீசல் விலை வெவ்வேறு விலையுடன் காணப்படுகிறது.
வாகன ஓட்டிகள் கவலை: பெட்ரோல் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனா். பெட்ரோல், டீசல் விலை உயா்வு காரணமாக இதர அத்தியாவசியப் பொருள்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.
சென்னையில் எவ்வளவு?: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றமின்றி காணப்பட்டது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.49-க்கு விற்கப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.39-க்கு விற்பனையாகிறது.