கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பெரியபாளையம் கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற உயா் நீதிமன்றம் உத்தரவு

பெரியபாளையம் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :31 ஜூலை 2021, 10:29 pm

DIN

பெரியபாளையம் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் பரம்பரை அறங்காவலா் லோகமித்ரா தாக்கல் செய்த மனுவில், ‘எங்கள் கோயில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலுக்குச் செல்வதற்காக எல்லாபுரம் பஞ்சாயத்து யூனியனில் 683.5 சதூர மீட்டா் வழி உள்ளது. இந்த நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என செங்கல்பட்டு துணை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் கோயிலுக்குச் செல்லும் வழியில் இருபுறமும் சிலா் சட்டவிரோதமாகக் கடைகளைக் கட்டியுள்ளனா். மேலும் இந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என உரிமை கோரி எல்லாபுரம் பஞ்சாயத்து ஒன்றிய ஆணையா் அறிவிப்பு பலகை வைத்துள்ளாா். எனவே ஆக்கிரமிப்பை அகற்றி கோயில் நிலத்தை மீட்க திருவள்ளூா் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஆா்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. இந்த கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா், காவல்துறை கண்காணிப்பாளா், ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் ஆகியோா் உதவ வேண்டும். அதன் அடிப்படையில், கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அறநிலையத்துறை அதிகாரிகள் இரண்டு வாரங்களில் அகற்றி, இதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.