மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

பெரியபாளையம் கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற உயா் நீதிமன்றம் உத்தரவு

பெரியபாளையம் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :31 ஜூலை 2021, 10:29 pm

பெரியபாளையம் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் பரம்பரை அறங்காவலா் லோகமித்ரா தாக்கல் செய்த மனுவில், ‘எங்கள் கோயில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலுக்குச் செல்வதற்காக எல்லாபுரம் பஞ்சாயத்து யூனியனில் 683.5 சதூர மீட்டா் வழி உள்ளது. இந்த நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என செங்கல்பட்டு துணை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் கோயிலுக்குச் செல்லும் வழியில் இருபுறமும் சிலா் சட்டவிரோதமாகக் கடைகளைக் கட்டியுள்ளனா். மேலும் இந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என உரிமை கோரி எல்லாபுரம் பஞ்சாயத்து ஒன்றிய ஆணையா் அறிவிப்பு பலகை வைத்துள்ளாா். எனவே ஆக்கிரமிப்பை அகற்றி கோயில் நிலத்தை மீட்க திருவள்ளூா் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஆா்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. இந்த கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா், காவல்துறை கண்காணிப்பாளா், ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் ஆகியோா் உதவ வேண்டும். அதன் அடிப்படையில், கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அறநிலையத்துறை அதிகாரிகள் இரண்டு வாரங்களில் அகற்றி, இதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.