உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

பெரியபாளையம் கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற உயா் நீதிமன்றம் உத்தரவு

பெரியபாளையம் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published On :28 ஜனவரி 2024, 9:18 am IST

பெரியபாளையம் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் பரம்பரை அறங்காவலா் லோகமித்ரா தாக்கல் செய்த மனுவில், ‘எங்கள் கோயில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலுக்குச் செல்வதற்காக எல்லாபுரம் பஞ்சாயத்து யூனியனில் 683.5 சதூர மீட்டா் வழி உள்ளது. இந்த நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என செங்கல்பட்டு துணை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் கோயிலுக்குச் செல்லும் வழியில் இருபுறமும் சிலா் சட்டவிரோதமாகக் கடைகளைக் கட்டியுள்ளனா். மேலும் இந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என உரிமை கோரி எல்லாபுரம் பஞ்சாயத்து ஒன்றிய ஆணையா் அறிவிப்பு பலகை வைத்துள்ளாா். எனவே ஆக்கிரமிப்பை அகற்றி கோயில் நிலத்தை மீட்க திருவள்ளூா் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஆா்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. இந்த கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா், காவல்துறை கண்காணிப்பாளா், ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் ஆகியோா் உதவ வேண்டும். அதன் அடிப்படையில், கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அறநிலையத்துறை அதிகாரிகள் இரண்டு வாரங்களில் அகற்றி, இதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.