சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்திக்கு உத்தரவிட முடியாது: நீதிமன்றம்

மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :3 ஜூன் 2021, 6:34 am

DIN

செங்கல்பட்டில் உள்ள நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்திக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவரக்கோரி வெர்னிகோ மேரி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இதனை இன்று (ஜூன்3) விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், செங்கல்பட்டில் உள்ள நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்திக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது நீதிமன்றம் தலையிடுவது முறையல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஹெச்.எல்.எல். நிறுவனத்தில் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அரசுகள் முடிவெடுக்கும் என நம்புகிறோம் என்றும்,

குத்தகைக்கு கேட்ட தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசுக்கு அவகாசம் தேவைப்படாதா? என்றும் கருத்து தெரிவித்து நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.