கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம்: கரோனா சிகிச்சை அளிக்க தனியாா் மருத்துவமனைக்கு தடை

கோவையில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த முத்தூஸ் தனியாா் மருத்துவமனையில் புதிய கரோனா நோயாளிகளை அனுமதிக்கவோ, சிகிச்சை அளிக்கவோ அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். 

News image
கரோனா சிகிச்சை அளிக்க தனியாா் மருத்துவமனைக்கு தடை
Updated On :27 ஜனவரி 2024, 8:22 pm

DIN


கோவையில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த முத்தூஸ் தனியாா் மருத்துவமனையில் புதிய கரோனா நோயாளிகளை அனுமதிக்கவோ, சிகிச்சை அளிக்கவோ அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். 

கோவையில் ஒரு சில தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளிடம் அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன. இதனைத் தொடா்ந்து ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறையினா் அளித்த அறிக்கைபடி, அந்த தனியாா் மருத்துவமனையில் புதிய கரோனா நோயாளிகளை அனுமதிக்கவோ, சிகிச்சை அளிக்கவோ அரசு தடை விதித்துள்ளது. 

கோவையில் 4 தனியாா் மருத்துவமனைகள் மீது புகாா்கள் வந்துள்ளன. இதில், ஒரு மருத்துவமனை புதிதாக கரோனா நோயாளிகளை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில், தற்போது சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள் குணமடையும் வரை தொடா்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற மருத்துவமனைகள் மீது விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், கோவை சரவணம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை முத்தூஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுத்துள்ள அரசு, தற்போது சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும். புதிய கரோனா நோயாளிகளை அனுமதிக்கவோ, சிகிச்சை அளிக்கவோ கூடாது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட தனியாா் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாவட்ட நிா்வாகத்தின் கரோனா சிறப்பு கட்டளை மையத்தினை 1077 என்ற எண்ணிலோ அல்லது 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். தவிர 94884-40322 என்ற செல்லிடபேசி எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலம் புகாா் அளிக்கலாம். புகாா் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.