கரோனா நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ. 5 லட்சம் வைப்பீடு செய்வதற்கான அரசாணை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வைப்பீடு செய்யப்பட்டு, அந்தக் குழந்தை 18 வயதை நிறைவடையும்போது அந்தத் தொகை வட்டியோடு அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 29-ம் தேதி அறிவித்தார்.
இது தவிர அந்தக் குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை, பட்டப் படிப்பு வரை கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசு ஏற்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளும் அறிவிப்பில் இடம்பெற்றிருந்தன.
அறிவிப்புகள் முழு விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..
இந்த அறிவிப்பு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
அரசாணை விவரம்:
இதுதவிர திட்டத்தை செயல்படுத்த நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளும் அரசாணையில் இணைக்கப்பட்டுள்ளன.
அரசாணை முழு விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்