கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் புதுதில்லியில் பணி முடிந்து வரும்போது வாகன விபத்தில் பலியானார்.
தேனி மாவட்டம் கம்பம் சின்ன வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பிரபாகரன் (33), இவர் புதுதில்லி ராணுவ படைப்பிரிவில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திவ்யா (30) என்ற மனைவியும், லோகிதா ஸ்ரீ (8), யுகாசினி (3) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
ராணுவ வீரர் ஆர்.பிரபாகரன் ஜூன் 14-ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு பணி முடிந்து திரும்ப வரும்போது தில்லியில் அவர் ஓட்டி வந்த மோட்டார் பைக் விபத்தில் சிக்கியதில் உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும் தில்லி காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி ராணுவ அதிகாரிகளிடம் விசாரணைக்கு பின் ஒப்படைத்தனர்.
இறந்த ராணுவ வீரர் பிரபாகரன் உடல் தில்லியில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கம்பத்துக்கு எடுத்துவரப்படுகிறது. புதன்கிழமை இறுதி மரியாதைக்குப்பின் கம்பத்தில் உடல் அடக்கம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆண்ட்ரே ரஸ்ஸலின் ஜெர்ஸிக்கு ஓய்வளித்த கொல்கத்தா அணி!

புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருச்சி என்ஐடி-ல் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

மருத்துவமனையில் சோனியா... ராகுல் காந்தியின் கேரள பிரசாரம் ஒத்திவைப்பு!
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

