தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஈரோடு மாவட்ட ஆட்சியராக கிருஷ்ணனுண்ணி பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியராக ஹெச். கிருஷ்ணனுண்ணி புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். 

News image
ஈரோடு மாவட்ட ஆட்சியராக கிருஷ்ணனுண்ணி பொறுப்பேற்பு
Updated On :16 ஜூன் 2021, 7:24 am

DIN

ஈரோடு:  ஈரோடு மாவட்ட ஆட்சியராக ஹெச். கிருஷ்ணனுண்ணி புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். 

ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய சி.கதிரவன், சேலம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் தலைவராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து தேனி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே 2016 இல் கோபிச்செட்டிபாளையத்தில் சார் ஆட்சியராக பணியாற்றியவர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை காலை கோப்புகளில் கையெழுத்திட்டு ஆட்சியராக கிருஷ்ணனுண்ணி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அதிகாரிகள், ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.