உசிலம்பட்டி: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக் கட்சியினர் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
உசிலம்பட்டி: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக் கட்சியினர் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

உசிலம்பட்டியில்  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, விடுதலைச் சிறுத்தை ஆகியவை பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலையை திரும்பப் பெற வேண்டும் மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும்   மத்திய அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது என கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அ.இ.பார்வர்ட் பிளாக் கட்சியினர் உசிலம்பட்டி பசும் முத்துராமலிங்கத் தேவர் சிலை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ’

இதில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஒன்றிய செயலாளர் ராமர் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பாக மாநிலச் செயலாளர் பாஸ்கர பாண்டியன் மாவட்ட செயலாளர் ராஜா மற்றும் விடுதலை கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com