ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

நீட் தேர்வு ஆய்வுக்குழுவுக்கு எதிராக பாஜக அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: அமைச்சர்

நீட் தேர்வுக்கு பற்றிய ஆய்வுக்குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வழக்குத் தொடுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

News image
Updated On :29 ஜூன் 2021, 5:46 am

DIN

நீட் தேர்வுக்கு பற்றிய ஆய்வுக்குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வழக்குத் தொடுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 

தமிழக மாணவர்களின் நலன் கருதியே திமுக அரசு, நீட் தேர்வு குறித்து ஆராய ஒரு குழுவை அமைத்துள்ளது. 

ஆனால், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, ஆய்வுக்குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குத் தொடுத்துள்ளது. இது தமிழக மாணவர்களின் நலனை குழி தோண்டி புதைக்கிற வகையில் உள்ளது. 

எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள பாஜக இரட்டை நிலைப்பாட்டுடன் உள்ளது தெரிகிறது. சட்டப்பேரவையில் ஆதரவாகவும், வெளியில் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர். நீட் தேர்வு குறித்த தெளிவான முடிவினை அவர்கள் அறிவிக்க வேண்டும். 

நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு பற்றிய அதிமுகவின் கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.