பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடலூரில் ரூ.51.36 லட்சம் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி

கடலூரில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.51.36 லட்சத்தைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

News image
கடலூரில் ரூ.51.36 லட்சம் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி
Updated On :2 மார்ச் 2021, 6:21 am

DIN

கடலூரில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.51.36 லட்சத்தைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி வட்டாட்சியர் கலாவதி தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளர் வி.குமார் கொண்ட குழுவினர் கடலூர் பெரியகங்கணாங்குப்பத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து வந்த காரை சோதனை நடத்திய போது உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.51.36 லட்சம் எடுத்துச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதனைப் பறிமுதல் செய்து கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் வருமான வரித்துறைக்கும் தகவல் அளித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.