தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தேர்தலில் 3-வது அணி அமைய வாய்ப்பில்லை: வைகோ

சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

News image
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
Updated On :27 ஜனவரி 2024, 7:40 pm

DIN

சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருவதால், கட்சி நிர்வாகிகளுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவசர ஆலோசனை நடத்தினார்.

சென்னை தாயகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் மதிமுக துணைப் பொதுச்செயலாளா் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு இந்த ஆலோசனை நடைபெற்றது. பின்னர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, ''தொகுதியை இறுதி செய்வது தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும். தொகுதிகளை பங்கிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை சென்றுகொண்டுள்ளது. 3-ம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு திமுக இன்னும் அழைக்கவில்லை.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக கெளரவமாக நடத்தியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் 3-வது அணி அமைய வாய்ப்பு குறைவு. கமல்ஹாசன் தலைமையிலான 3வது அணிக்கு மதிமுக செல்ல வாய்ப்பில்லை'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.