சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருவதால், கட்சி நிர்வாகிகளுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவசர ஆலோசனை நடத்தினார்.
சென்னை தாயகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் மதிமுக துணைப் பொதுச்செயலாளா் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு இந்த ஆலோசனை நடைபெற்றது. பின்னர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, ''தொகுதியை இறுதி செய்வது தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும். தொகுதிகளை பங்கிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை சென்றுகொண்டுள்ளது. 3-ம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு திமுக இன்னும் அழைக்கவில்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக கெளரவமாக நடத்தியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் 3-வது அணி அமைய வாய்ப்பு குறைவு. கமல்ஹாசன் தலைமையிலான 3வது அணிக்கு மதிமுக செல்ல வாய்ப்பில்லை'' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதா

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan

அதிபர் டிரம்ப் - மேயர் மம்தானி சந்திப்பு! கைதான பல்கலைக்கழக மாணவி விடுதலை!
வீடியோக்கள்

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...
"இனி EPSக்கு எந்த காலத்திலும் வெற்றி இல்லை!" ஓ.பன்னீர் செல்வம் பேட்டி | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

