வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தஞ்சாவூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: ஐடிஐ மாணவர்கள் 2 பேர் பலி

தஞ்சாவூர் அருகே சனிக்கிழமை பிற்பகல் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஐஐடி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

News image
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: ஐடிஐ மாணவர்கள் 2 பேர் பலி
Updated On :6 மார்ச் 2021, 11:19 am

DIN

தஞ்சாவூர் அருகே சனிக்கிழமை பிற்பகல் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஐஐடி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் அருகே மணக்கரம்பை செபஸ்தியார் கோயில் தெருவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் மகன் ஆனஸ்ட்ராஜ் (21). இவரும், தஞ்சாவூர் டவுன் கரம்பையைச் சேர்ந்த மதியழகன் மகன் விஜய் (21) என்பவரும் திருவையாறு அருகே கடுவெளியில் உள்ள ஐ.டி.ஐ.யில் இரண்டாமாண்டு எலெக்டீரீசியன் படித்து வந்தனர்.

இருவரும் சனிக்கிழமை ஐடிஐயில் இரண்டாமாண்டு தேர்வு எழுதிவிட்டு மோட்டார் சைக்கிளில் திருவையாறு வழியாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். அம்மன்பேட்டை கடைவீதியில் சென்ற இவர்கள் மீது தஞ்சாவூரிலிருந்து திருவையாறு நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ஆனஸ்ட்ராஜ், விஜய் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.