காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டி

சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 154 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News image
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் (கோப்புப்படம்)
Updated On :8 மார்ச் 2021, 6:59 pm

DIN

சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 154 இடங்களில் போட்டியிடவுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியிலுள்ள இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 40 தொகுதிகளும், சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சென்னை வடபழனியில் இன்று (மார்ச் 8) இரவு நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த தொகுதிப் பங்கீடு உடன்பாட்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் கையெழுத்திட்டார்.

பின்னர் மூவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, மாற்றத்திற்கான அணி தமிழகத்தில் உருவாகியுள்ளது என்று கூறினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக  அக்கட்சியின் பொதுச்செயலாளர்  சி.கே.குமரவேல் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.