கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தேமுதிகவினர் பக்குவம் இல்லாத அரசியல் நடத்துகின்றனர்: முதல்வர் 

தேமுதிகவினர் பக்குவம் இல்லாத அரசியல் நடத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :13 மார்ச் 2021, 3:28 pm

DIN

தேமுதிகவினர் பக்குவம் இல்லாத அரசியல் நடத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலம் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, திமுக தேர்தல் அறிக்கையை படித்து பார்த்த பிறகே கருத்து சொல்லுகிறேன். புதிய தமிழகம் ஏற்கெனவே எங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. 
தேமுதிகாவால் அதிமுகவுக்கு இழப்பு இல்லை. தேமுதிகவினர் பக்குவம் இல்லாத அரசியல் நடத்துகின்றனர். கட்சிகளின் வாக்கு வங்கிக்கு ஏற்றவாறு தொகுதி எண்ணிக்கை ஒதுக்கப்படுகிறது. 
திமுக தேர்தல் அறிக்கைக்கு முன்பாகவே, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு நடைமுறைப்படுத்திய அரசு அதிமுக அரசு. புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. 
புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். அதிமுக கூட்டணி இந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும். மக்கள் சரியான தீர்ப்பை எங்களுக்கு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.