ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே எல் இளவழகன் திங்கள்கிழமை ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமேகலையிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அப்போது ஆற்காடு தொகுதி அதிமுக தேர்தல் பொறுப்பாளர் அப்துல்லா. ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக வர்த்தகர் அணி செயலாளர் ஏ .வி.சாரதி ஆகியோர் உடனிருந்தனர்.