வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: நீதிமன்றம்

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்
Published on
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி தெற்கூரில் பட்டியலின மக்களுக்கு தனி வாக்குச்சாவடி கோரி தூத்துக்குடியை சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பட்டியலின மக்கள் வாக்களிக்க செல்லும்போது குறிப்பிட்ட சாதியினர் தாக்குதல் நடத்துவதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவின் மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வுக்கு முன்பு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், பட்டியலின மக்களுக்கு தனி வாக்குச்சாவடிகள் அமைக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும், வாக்காளர்களின் பாதுகாப்பை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com