கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் மாட்டுவண்டியில் சென்று மனு தாக்கல்

புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் மாட்டுவண்டியில் சென்று மனு தாக்கல் செய்தனர்.

News image
புதுச்சேரியில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய மாட்டுவண்டியில் செல்லும் பாமக வேட்பாளர்கள்.
Updated On :27 ஜனவரி 2024, 7:47 pm

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் மாட்டுவண்டியில் சென்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த பாமக தனித்துப் போட்டியிடுகிறது.

மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 15 தொகுதிகளில் பாமக வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர்.

புதுச்சேரி பாமக அலுவலகத்தில் அக்கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்த மாநில அமைப்பாளர் தன்ராஜ், செய்திகளிடம் கூறுகையில், புதுச்சேரி தேர்தல் துறை பாரபட்சமாக  செயல்படுகிறது.

பாஜக, என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். பாமக போன்ற கட்சிகளை அவமதித்து, அலை கழிக்கின்றனர். புதுச்சேரியில் நேர்மையான தேர்தல் நடைபெறும் என்று சந்தேகமாக உள்ளது என்றார்.

இதனையடுத்து பாமக வேட்பாளர்கள் மாட்டுவண்டியில் சென்று வேட்பு மனுத் தாக்கல் செய்யப் புறப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.