விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்: கனிமொழி உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று கனிமொழி எம்.பி.உறுதியளித்துள்ளார்.

News image
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்: கனிமொழி உறுதி
Updated On :20 மார்ச் 2021, 11:07 am

DIN

திருப்பூர்: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலையாறு -நல்லாறு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று கனிமொழி எம்.பி. உறுதியளித்துள்ளார்.

தாராபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கயல்விழியை ஆதரித்து திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. குண்டடத்தில் தேர்தல் பிரசாரத்தில் சனிக்கிழமை ஈடுபட்டார். 

அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்தவும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மாதந்தோறும் ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படுவதுடன், நாள்தோறும் ரூ.300 ஊதியம் வழங்கப்படும். கிராமப்புற மகளிர் நகர்புறங்களில் அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம். 

இதற்காக வீட்டில் இருப்பவர்களிடம் பணம் கேட்க வேண்டாம். திமுக ஆட்சியில் கொடுத்த தொலைக்காட்சி பெட்டி பயன்பாட்டில் உள்ள நிலையில், அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர் உபயோகத்தில் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். 

தமிழகத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் அரசு வேலைகள் வழங்கப்படும். ஒவ்வொரு எரிவாயு உருளைக்கும் ரூ.100 குறைக்கப்படும். மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து செய்யப்படும். குண்டடத்தில் காய்கறி சந்தை அமைக்கப்படும். ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்.  தமிழ்நாட்டின் ஆட்சியை தில்லியில் இருந்து நடத்தக்கூடாது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானால் தமிழ்நாட்டின் ஆட்சி தமிழ்நாட்டில் இருந்துதான் நடத்தப்படும். 

ஆகவே, இத்தகையை திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். இந்த பிரசாரத்தின்போது, தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் கயல்விழி, காங்கயம் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.