வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாணம் வருகிற 28-ஆம் தேதி இரவு 7 மணி முதல் 8 மணி வரை கோயில் முன்புள்ள ஆடிப்பூர கொட்டகையில் வைத்து நடைபெற உள்ளது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண கொடியேற்றம்

Updated On :20 மார்ச் 2021, 10:30 am


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாணம் வருகிற 28-ஆம் தேதி இரவு 7 மணி முதல் 8 மணி வரை கோயில் முன்புள்ள ஆடிப்பூர கொட்டகையில் வைத்து நடைபெற உள்ளது.

இதற்கான கொடியேற்ற விழா சனிக்கிழமை கோவிலில் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து கோயில் வளாகம் மற்றும் கொடிமரம் அமைந்துள்ள பகுதிகளில் வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

கொடி ஏற்றப்படுவதற்கு முன் கொடி பட்டத்திற்குச் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டு மாட வீதிகள் 4 ரத வீதிகள் வழியாக கொடிப் பட்டம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு கொடிமரத்தில் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது.

Story image

இதனைத் தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது கொடியை அர்ச்சகர் வாசுதேவன் ஏற்றினர்.  இந்த நிகழ்ச்சியில் தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி இளங்கோவன் காவல் துணைக் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

கொடியேற்ற நிகழ்வை முன்னிட்டு ஆண்டாளும் ரெங்கமன்னாரும் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். இதைத் தொடர்ந்து தினமும் ஆண்டாள் ரங்க மன்னார் வீதி உலா நிகழ்ச்சிகளும் பல்வேறு மண்டபங்களில் எழுந்தருள உள்ளனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண விழா 28ஆம் தேதி இரவு 7 முதல் 8 மணிக்குள் நடைபெறுகிறது அன்று காலை  செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.