பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சால்வை, பூங்கொத்து வேண்டாம்: டிடிவி தினகரன் வேண்டுகோள்

கரோனா இரண்டாவது அலை நெருங்குவதால் கழக உடன்பிறப்புகள் சால்வை, பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

News image

டிடிவி தினகரன்

Updated On :22 மார்ச் 2021, 8:12 am

DIN

கரோனா இரண்டாவது அலை நெருங்குவதால் கழக உடன்பிறப்புகள் சால்வை, பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறைந்து மக்களிடம் இயல்பு வாழ்க்கை திரும்பிவரும் நிலையில் தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உலக நாடுகளிடையே கரோனா இரண்டாம் அலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முகக்கவசம், சமூக இடைவெளி, கரோனா பரிசோதனை, கரோனா தடுப்பூசி என மாநிலங்கள், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், 

'கரோனா இரண்டாவது அலை நெருங்குகிறது: பொதுமக்களும் போதிய விழிப்போடு இருக்க வேண்டும்! கழக உடன்பிறப்புகள் சால்வை, பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.