காவிரி ஆற்றிலிருந்து வேடசந்தூர் தொகுதிக்கு ரூ.182 கோடி செலவில் தண்ணீர் கொண்டு வருவதற்கான திட்டத்திற்கு ஆய்வுப் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஏப்.1ஆம் தேதி முதல் அனைத்து பகுதிகளுக்கும் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே பயிர்க் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, 18 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓட்டுநர் உரிமம் பெற்று கொடுக்கப்படும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளை இலவசமாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளோம்.