மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

பெரியபாளையம் அருகே செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்

பெரியபாளையம் அருகே பெரியசெங்காத்தாகுளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் நவகிரக திருக்கோயிலில் புஷ்கர அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

News image

ஸ்ரீ செல்வ விநாயகர் நவகிரக திருக்கோயிலில் புஷ்கர அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

Updated On :24 மார்ச் 2021, 6:57 am

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள பெரியசெங்காத்தாகுளம் கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர் நவகிரக திருக்கோயிலில் புஷ்கர அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் நவகிரக திருக்கோவில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

இதன்பன்னர் 12 ஆண்டுகளுக்குப் பின்பு இம்மாதம்  புஷ்கர அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 22-ஆம் தேதி அன்று கணபதி பூஜை தொடங்கி கோபூஜை பிரவேச பலி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. 23-ஆம் தேதி  சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. 

24-ஆம் தேதி இன்று அதிகாலை மூன்றாம் கால யாக பூஜை கணபதி ஹோமம் ருத்ர ஹோமம் நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்ற பின்னர் இன்று காலை 9லிருந்து 10.30 மணி அளவில் ஹோம பூஜைகள் நடைபெற்று பின்னர் ஹோம குண்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரைக் கொண்டு புரோகிதர்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் சுற்றி வலம் வந்து பின்னர் கோபுர கலசத்தின் மீது கொண்டு வரப்பட்ட புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.

பின்னர் அங்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள்  சிறப்பாக செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.