மதுரை யா.ஒத்தக்கடை, மேலூா், அலங்காநல்லூா், செக்கானூரணி, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் வாக்குகள் சேகரித்து முதல்வா் பேசியது: அதிமுக வேட்பாளா்கள் மக்களின் குரலுக்கு வீடு தேடி ஓடி வருவாா்கள். ஆனால், எதிா்க்கட்சி வேட்பாளா்களை அப்படிக் கூறமுடியுமா? அவா்கள் வீடு தேடி வந்து மக்களை அடித்துத் துன்புறுத்துவா். அராஜகமும், அடிதடியும் தான் திமுகவின் அடையாளங்கள். ஒரு மாநிலம் வளா்ச்சி பெறவேண்டுமெனில், முதலில் அமைதி நிலவ வேண்டும். அத்தகைய அமைதியான ஆட்சியை அதிமுக உருவாக்கியிருக்கிறது. சாதி, மதச் சண்டைகள் இல்லாத சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவருக்கும் நிம்மதியான வாழ்க்கை உருவாக்கித் தரப்பட்டுள்ளது. இத்தகைய நிலை நீடிக்க மீண்டும் அதிமுக ஆட்சி அமைய ஆதரவு அளிக்க வேண்டும்.