எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தமிழக மீனவர்கள் 40 பேர் கைது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணை

தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை (மார்ச் 29) விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

News image
தமிழக மீனவர்கள் 40 பேர் கைது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணை
Updated On :26 மார்ச் 2021, 8:57 am

DIN

தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை (மார்ச் 29) விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மதுரை வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவில்,  ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 40 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்கள் இது போல தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும், தாக்கப்படுவதும் ஏற்கத்தக்கதல்ல.  எனவே இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என முறையிட்டார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை (மார்ச் 29) விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.